சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

இரவு நேரங்களில் கலந்தாய்வு நடத்த  பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிகழ்வை இரவு நேரங்களில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிகழ்வை இரவு நேரங்களில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செளத்ரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் ராஜு வரவேற்புரை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் மாநில சிறப்புத் தலைவர் டி.சுப்பிரமணியன், மாநிலத் தலைவர் மகேந்திரன், மாநிலச் செயலாளர் நரசிம்மன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். 
   இதில், ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வை இரவு நேரங்களில் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில் மாவட்ட, வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சி.குமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.