திருவள்ளூர் அருகே ஆவின் பால்பண்ணை வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதோடு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறி வரும் சூழ்நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால்பண்ணை வளாகம் அமைந்துள்ளது. இங்கு கிராமங்களில் இருந்து வரும் பால் சேகரித்து குளிரூட்டப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, பாலில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களான பால்கோவா, நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைத் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பியும் வருகின்றனர். இந்த வளாகத்தில் பல்வேறு பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்ட குப்பைகளைக் குவித்து வைத்துள்ளனர்.
ஏற்கெனவே, குளிரூட்டம் செய்யப்படும் இயந்திரங்களில் இருந்து வெளியேறும் நீரும், அதோடு, மழைநீரும் தேங்கியுள்ளதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஆவின் பால்பண்ணை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஏற்கெனவே ஆவின் பால்பண்ணை முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் கூறிய அறிவுரையின்படி டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்கும் வகையில் குளிரூட்டம் செய்யப்படும் பகுதிகளில் இருந்து வெளியேறும் நீர், குழாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதேபோல், வளாகத்தில் உள்ள மழை நீரையும் தேங்கவிடாமல் அவ்வப்போது அகற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சர்களைச் சந்தித்தார் பாடகர் வேடன்!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


