தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

தேசியத் திறனாய்வுத் தேர்வில் 7,580 பேர் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் 24 மையங்களில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் 7,580 பேர் பங்கேற்று தேர்வு

Updated On :5 நவம்பர் 2018, 8:07 am IST

திருவள்ளூர் மாவட்டத்தில் 24 மையங்களில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் 7,580 பேர் பங்கேற்று தேர்வு எழுதியதாக முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கிராமங்களில் இருந்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இடை நிற்றலை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
இதேபோல் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டுக்கான இத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து இத்தேர்வு எழுதுவதற்கு 8,521 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். 
இத்தேர்வுக்காக மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட 24 மையங்களில், மொத்தம் 7,580 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 
இதில், 941 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ. 1,250 வழங்கப்பட உள்ளது. அதேபோல், இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு ரூ. 2 ஆயிரமும், ஆராய்ச்சிப் படிப்புக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற காரணங்களால் மாணவ, மாணவிகள் இத்தேர்வில்,  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.