கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற வழிப்பறி சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டி சிறுபுழல்பேட்டையை அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி சண்முகபாண்டியன்(43). அவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டிற்கு சிப்காட் தொழிற்பேட்டை வழியே பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து பணம் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை திருடிக் கொண்டு தப்பியோடியது. இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த இருவரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழிப்பறியில் தொடர்புடைய மணி(28), எண்ணூரைச் சேர்ந்த லாவா குமார்(29) ஆகிய இருவரையும், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகை செல்வோர் கவனத்துக்கு... இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

