இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

வனப்பகுதியில் குப்பை கொட்ட நகராட்சிக்கு தடை

வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் ஏற்படும் சுகாதாரக் கேடு குறித்து ஆய்வு மேற்கொண்ட திருத்தணி வட்டாட்சியர், நகராட்சி நிர்வாகத்துக்கு குப்பை கொட்ட தடைவித்தார். 

 பெரியகடம்பூர் கிராமத்தில் உள்ள வனப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வட்டாட்சியர்  செங்கலா.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST


வனப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் ஏற்படும் சுகாதாரக் கேடு குறித்து ஆய்வு மேற்கொண்ட திருத்தணி வட்டாட்சியர், நகராட்சி நிர்வாகத்துக்கு குப்பை கொட்ட தடைவித்தார். 
திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, திருத்தணி அருகே உள்ள பெரியகடம்பூர் காப்புக் காடு பகுதியில் கொட்டி தீ வைத்து எரித்து வந்தனர். இதனால் வனவிலங்குள் உயிரிழந்து வருவதாகவும், பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுவதாகவும்குறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின் பேரில், திருத்தணி வட்டாட்சியர் செங்கலா நேரில் ஆய்வு செய்தார். அப்போது, இனிவரும் காலங்களில் குப்பைகளை காப்புக் காட்டில் கொட்டக்கூடாது, கொட்டப்பட்ட குப்பைகளை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.