கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட திடீர் ஆய்வில், தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக அரசு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கோ.கனகராஜ் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மளிகைக் கடைகள், உணவு விடுதிகள், சாலையோரக் கடைகளில் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 15 கடைகளில் தடை செய்யப்பட்ட 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கடைகளுக்கு ரூ. 45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆய்வின்போது, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், கும்மிடிப்பூண்டி சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் கோபி உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் மே 23 வரை மழைக்கு வாய்ப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026

சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்சிபி!

கலம் தொடா மகளிர்
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
