கும்மிடிப்பூண்டி அருகே அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (50). இவர், மாதர்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோமளா. பன்பாக்கம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்தினருடன் கவரப்பேட்டையில் வசித்து வந்தார்.
முரளி திங்கள்கிழமை பள்ளிக்கு வரவில்லையாம். இந்நிலையில், மாதர்பாக்கத்தை அடுத்த போந்தவாக்கம் அருகே கிணற்றில் இருந்து முரளியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பாதிரிவேடு போலீஸார் முரளியின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!
பாஜகவின் ‘ஹாட்ரிக்’ வெற்றி!

திருவண்ணாமலையில் தூய்மைப் பணிகள்: முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் ‘டிரா’
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
