கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

காவலர்களுக்கான கண் சிகிச்சை முகாம்: எஸ்.பி. பங்கேற்பு

திருவள்ளூரில் ஓட்டுநர் காவலர்களின் பார்வை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை

Updated On :25 பிப்ரவரி 2019, 7:47 am IST

திருவள்ளூரில் ஓட்டுநர் காவலர்களின் பார்வை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்சிகிச்சை முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தொடங்கி வைத்தார்.
காவல் துறையில் வாகன ஓட்டுநர் காவலர்களின் பார்வை தரத்தை பாதுகாக்கவும், சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும் வகையில், கண் சிகிச்சை முகாம் நடத்தவும், மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகமும், அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. 
அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆயுதடைப் படை வளாகத்தில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தலைமை வகித்து, முகாமைத் தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்டத்தில் காவல் துறை வாகன ஓட்டுநர் காவலர்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர். இந்த முகாமில் 64 பேர் வரை கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பங்கேற்று, காவல் துறை ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் போது, பின்பற்ற வேண்டிய சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.