திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, லாரி ஆகிய வாகனங்கள் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலப் பதிவு எண் கொண்ட லாரி, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஆகிய இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை இரு வாகனங்களும் மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அலுவலக கண்காணிப்பாளர் சுவாமிநாதன் திருவள்ளூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







