திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையத்தில் உள்ள கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.
சாலை விதிகளைப் பின்பற்றுதல், வாகனம் இயக்கும்போது செல்லிடப்பேசியில் பேசுவதைத் தவிர்த்தல், தலைக்கவசம் கட்டாயம் அணிதல், வாகன ஆவணங்களை சரியாக வைத்திருத்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து மாணவ, மாணவியர் சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது தொடர்பான உறுதிமொழியை ஏற்றனர். இதில் கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏழைகளின் இறைவன் எம்.ஜி.ஆர்

வரப்பெற்றோம் (11.05.2026)

மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற முதல்வர் Vijay! | TVK | DMK

அன்புமணி இல்லத்தில் முதல்வர் விஜய்!
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
