திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையத்தில் உள்ள கோஜான் மேலாண்மை மற்றும் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராஜன் தலைமை வகித்தார்.
சாலை விதிகளைப் பின்பற்றுதல், வாகனம் இயக்கும்போது செல்லிடப்பேசியில் பேசுவதைத் தவிர்த்தல், தலைக்கவசம் கட்டாயம் அணிதல், வாகன ஆவணங்களை சரியாக வைத்திருத்தல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து மாணவ, மாணவியர் சாலைப் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது தொடர்பான உறுதிமொழியை ஏற்றனர். இதில் கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்! விமான நிலையத்திலிருந்து சாலைவலம்!
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மீண்டும் போர் தொடங்கும்: டிரம்ப்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


