தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளைத் தொடரும் பேரிடர் மீட்புக் குழுக்கள்...

News image

தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து - PTI

Updated On :31 மே 2026, 9:29 am IST

புது தில்லி : தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே கட்டப்பட்டிருந்த அடுக்குக் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.

தெற்கு தில்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சைதுலாஜ்ப் பகுதியில் உள்ள வெஸ்டா்ன் மாா்கில் உள்ள 3 மாடி அடுக்குக் கட்டடம் சனிக்கிழமை (மே 30) மாலை இடிந்து விழுந்தது. வணிக ரீதியான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததில் அந்தக் கட்டடத்திலிருந்த இளைஞர் ரவி (26 வயது) இடிபாடுகளில் சிக்கி பலியானார்.

கட்டடத்தின் தரைத்தளத்தில் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்ததாகவும் மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாணவா்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி தீயணைப்பு சேவைகள் வீரர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோத்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் சனிக்கிழமை நள்ளிரவைக் கடந்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலையிலும் தொடருகிறது.

இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Delhi: 3-storey commercial building reduced to rubble; 12 rescued as search continues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.