தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளைத் தொடரும் பேரிடர் மீட்புக் குழுக்கள்...

News image

தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து - PTI

Updated On :31 மே 2026, 9:29 am IST

புது தில்லி : தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே கட்டப்பட்டிருந்த அடுக்குக் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது.

தெற்கு தில்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சைதுலாஜ்ப் பகுதியில் உள்ள வெஸ்டா்ன் மாா்கில் உள்ள 3 மாடி அடுக்குக் கட்டடம் சனிக்கிழமை (மே 30) மாலை இடிந்து விழுந்தது. வணிக ரீதியான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்தக் கட்டடம் இடிந்து விழுந்ததில் அந்தக் கட்டடத்திலிருந்த இளைஞர் ரவி (26 வயது) இடிபாடுகளில் சிக்கி பலியானார்.

கட்டடத்தின் தரைத்தளத்தில் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்ததாகவும் மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாணவா்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தில்லி தீயணைப்பு சேவைகள் வீரர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் கைகோத்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் சனிக்கிழமை நள்ளிரவைக் கடந்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) காலையிலும் தொடருகிறது.

இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Summary

Delhi: 3-storey commercial building reduced to rubble; 12 rescued as search continues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.