அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

பஜன்புரா மெட்ரோ நிலையம் அருகே தீப்பிடித்து எரிந்த வாடகை காா்

News image

தீ விபத்து... - பிரதிப் படம்

Updated On :26 நிமிடங்கள் முன்பு

நமது நிருபா்

வடகிழக்கு தில்லியின் பஜன்புரா மெட்ரோ நிலையம் அருகே திங்கள்கிழமை காலை ஒரு வாடகைக் காா் தீப்பிடித்து எரிந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மெட்ரோ நிலையத்தின் 2-ஆம் எண் நுழைவாயில் அருகே நடந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அவா்கள் கூறினா்.

காலை 7.30 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்து அழைப்பு வந்ததை அடுத்து, ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்தது. காலை 8.25 மணிக்குள் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா் என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் கூறினாா்.