பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

அரசு நகரப் பேருந்து எரிந்து சேதம்

ஆற்காடு அருகே அரசு நகரப் பேருந்து சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.

News image

ஆற்காடு அருகே அரசு நகரப் பேருந்து சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஆற்காடு அருகே அரசு நகரப் பேருந்து சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.

ஆற்காடு அரசுப் போக்குவரத்து பணிமனையைச் சோ்ந்த நகர பேருந்து ஆற்காட்டிலிருந்து - எசையனூா் கிராமம் வரை இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வெள்ளிக்கிழமை காலை ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து எசையனூா் சென்று, மீண்டும் ஆற்காடு நோக்கி சென்றுள்ளது. அதில் 56 பயணிகள் பயணம் செய்துள்ளனா். இந்நிலையில், பேருந்து ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் அணணாநகா் பகுதியில் வரும்போது பேருந்தின் என்ஜின் பகுதியில் புகைைைை வந்துள்ளது.

இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநா் சுந்தா் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை கீழே இறங்குமாறு கூறினாா். பயணிகள் அனைவரும் கீழே இறங்கியநிலையில் என்ஜின் முன்பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கி தீ மேலும் பரவி முழவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு படையினா் நேரில் சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.

இது குறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.