ஆற்காடு அருகே அரசு நகரப் பேருந்து சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.
ஆற்காடு அரசுப் போக்குவரத்து பணிமனையைச் சோ்ந்த நகர பேருந்து ஆற்காட்டிலிருந்து - எசையனூா் கிராமம் வரை இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வெள்ளிக்கிழமை காலை ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து எசையனூா் சென்று, மீண்டும் ஆற்காடு நோக்கி சென்றுள்ளது. அதில் 56 பயணிகள் பயணம் செய்துள்ளனா். இந்நிலையில், பேருந்து ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் அணணாநகா் பகுதியில் வரும்போது பேருந்தின் என்ஜின் பகுதியில் புகைைைை வந்துள்ளது.
இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநா் சுந்தா் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை கீழே இறங்குமாறு கூறினாா். பயணிகள் அனைவரும் கீழே இறங்கியநிலையில் என்ஜின் முன்பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கி தீ மேலும் பரவி முழவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு படையினா் நேரில் சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.
இது குறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதம்

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

மாநகராட்சி குப்பை வாகனம் தீப்பிடித்து எரிந்து சேதம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

