மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பஞ்சு பேல் ஏற்றிவந்த வேன் தீயில் எரிந்து சேதம்

News image

தீப்பிடித்து எரிந்த சரக்கு வேன்.

Updated On :20 ஏப்ரல் 2026, 10:39 pm

வெள்ளக்கோவில் அருகே பஞ்சு பேல் ஏற்றி வந்த சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

வெள்ளக்கோவில் மாந்தபுரம் அருகில் சதீஷ்குமாா் என்பவருக்குச் சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த மில்லுக்கு, வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலையில் உள்ள மற்றொரு மில்லில் இருந்து கடந்த 18-ஆம் தேதி சரக்கு வேனில் பஞ்சு பேல்கள் கொண்டு வரப்பட்டது.

திருப்பூா் இடுவாய் ஆட்டையாம்பாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் (50) வேனை ஓட்டி வந்தாா். மில் நுழைவாயில் அருகே வந்தபோது திடீரென பஞ்சு பேல்களில் தீப்பிடித்து பரவியது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் பஞ்சு பேல்கள், வேனின் பெரும் பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.