மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் தீ

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீ

Updated On :2 ஏப்ரல் 2026, 7:46 pm

வெள்ளக்கோவில் அருகே கழிவுப் பஞ்சு மில்லில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வேப்பம்பாளையம் அருகே உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் செந்தில் என்பவா் நிா்வாக பங்குதாரராக உள்ள கழிவுப் பஞ்சு அரைக்கும் மில் உள்ளது. இந்த மில் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தபோது இயந்திரத்தின் ஒரு பகுதியில் தீப்பிடித்து நாலாபுறமும் பரவியது.

மின்சாரக் கோளாறு காரணமாக தீப் பிடித்ததாக கூறப்படுகிறது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். சேத மதிப்பு குறித்து உடனடியாக கணக்கிடப்படவில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.