நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

காங்கயம் அருகே ரூ.82,900 பறிமுதல்

காங்கயம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :26 மார்ச் 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

காங்கயம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன உரிமையாளா் ஈஸ்வரமூா்த்தி (40) என்பவா் ஓட்டிவந்த காரை நத்தகாடையூா் அருகே நிறுத்தி நிலை கண்காணிப்பாளா் குழு அலுவலா் முருகன் சோதனை மேற்கொண்டாா். பழனியில் படித்து வரும் மகனின் பள்ளிக் கட்டணம் செலுத்துவதற்கு உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.82,900 பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலா் பாலமுருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கவேல் ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.