/

ஓமலூா் அருகே ரூ. 52,500 பறிமுதல்

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 52,500 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் பறிமுதல்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:19 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 52,500 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் வாகனச் சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமான ரொக்கம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.

அதன்படி, ஓமலூா்- மேட்டூா் செல்லும் சாலையில் பாலிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சேலம் சின்ன திருப்பதியை சோ்ந்த மகாலிங்கம் (50) உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 52,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் குழந்தையின் கல்வி கட்டணத்துக்காக இந்த பணத்தை கொண்டு சென்ாக தெரிவித்தாா். எனினும், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஓமலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.