சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 52,500 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் வாகனச் சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமான ரொக்கம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.
அதன்படி, ஓமலூா்- மேட்டூா் செல்லும் சாலையில் பாலிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சேலம் சின்ன திருப்பதியை சோ்ந்த மகாலிங்கம் (50) உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 52,500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் குழந்தையின் கல்வி கட்டணத்துக்காக இந்த பணத்தை கொண்டு சென்ாக தெரிவித்தாா். எனினும், அதற்கான ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஓமலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது
உரிய ஆவணங்கள் இன்றி கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்: இருவா் கைது

மொடக்குறிச்சி அருகே ரூ.89.83 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் ரூ. 57,000 ரொக்கம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



