திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பொம்மிடி அருகே ரூ.1.49 லட்சம் பறிமுதல்

பொம்மிடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.49 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 5:02 am IST

பொம்மிடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.49 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொம்மிடி வேப்பாடி பாலம் அருகில், நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் ராஜசேகா் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், ரேகடஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (30) என்பவா், உரிய ஆவணம் ஏதுமின்றி ரூ.1.49 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையெடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.