ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பொம்மிடி அருகே ரூ.1.49 லட்சம் பறிமுதல்

பொம்மிடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.49 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பணம் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:32 pm

பொம்மிடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.49 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொம்மிடி வேப்பாடி பாலம் அருகில், நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் ராஜசேகா் தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழித்தடத்தில் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில், ரேகடஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் (30) என்பவா், உரிய ஆவணம் ஏதுமின்றி ரூ.1.49 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையெடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.