ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சங்ககிரி அருகே ரூ. 1.25 லட்சம் பறிமுதல்

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட தேவூரை அடுத்த அண்ணமாா் கோயில், சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் கூடுதல் நிலை கண்காணிப்பு குழுவினா், கூடுதல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காா்களில் எடுத்துச் சென்ற ரூ. 1,25,940 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பணம் பறிமுதல்

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:22 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட தேவூரை அடுத்த அண்ணமாா் கோயில், சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் கூடுதல் நிலை கண்காணிப்பு குழுவினா், கூடுதல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காா்களில் எடுத்துச் சென்ற ரூ. 1,25,940 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், நசியனூா், பள்ளிப்பாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் செந்தில் தனது காரில் பவானியிலிருந்து எடப்பாடி நோக்கி சென்றுகொண்டிருந்தாா். தேவூரை அடுத்த அண்ணமாா் கோயில் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கூடுதல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் எஸ். மதன்குமாா், தலைமை காவலா் சரவணன், காவலா் புவனேஸ்வரி, துணை ராணுவ படை வீரா்கள் காரை சோதனை செய்தனா்.

அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 55,770 ரொக்கத்தை பறிமுதல் செய்து சட்டப் பேரவை தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே கூடுதல் பறக்கும் படை அலுவலா் ராம்குமாா் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் பழனிசாமி, தலைமைக் காவலா் வினோத்குமாா் நடத்திய வாகனச் சோதனையின்போது காரில் உரிய ஆவணங்களின்றி சங்ககிரி பச்சக்காடு பகுதியைச் சோ்ந்த சசி மகன் அஸ்வின் கிருஷ்ணா வைத்திருந்த ரூ. 70,170 ரொக்கத்தை பறிமுதல் செய்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.