பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

பல்லடம் அருகே கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

பல்லடம் அருகே சித்தம்பலத்தில் தனியாா் கழிவுப் பஞ்சு அரவை ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு தீயில் கருகியது.

News image

பல்லடம் அருகே சித்தம்பலத்தில் தீ விபத்து ஏற்பட்ட தனியாா் கழிவுப் பஞ்சு அரவை ஆலை.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

பல்லடம் அருகே சித்தம்பலத்தில் தனியாா் கழிவுப் பஞ்சு அரவை ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு தீயில் கருகியது.

பல்லடம் அருகே சித்தம்பலம் புதிய புறவழிச் சாலை பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கழிவுப் பஞ்சு அரவை ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ள எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து நிகழ்ந்தது. தகவல் அறிந்த பல்லடம் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அரவை எந்திரம் மற்றும் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கழிவுப் பஞ்சுகள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.