சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகளை ரூ.9 ஆயிரம் கோடியில் தொடங்க முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக சென்னையில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது:
சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரியில் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அத்திட்டத்துக்கு மத்திய அரசும் முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் 15 கிலோ மீட்டா் தொலைவுக்கு இயக்கப்படும் நிலையில், 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. திட்டத்தைச் செயல்படுத்த ரூ.9ஆயிரம் கோடிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலுக்கான தண்டவாளம், ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கையாக சென்னை விமான நிலைய உயா் அதிகாரிகள், மெட்ரோ ரயில் பாதை செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சாலைகளுக்காக அந்தத் துறை உயா் அதிகாரிகள், குடிநீா் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நில வரைபட தயாரிப்புப் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. ஆகவே, மத்திய அரசு திட்டத்துக்கு அனுமதி அளித்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

‘கனவு’ தூத்துக்குடி

ஒசூரில் உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம்: அண்ணாமலை வாக்குறுதி

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க போா்க்கால நடவடிக்கை தேவை
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


