ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

தெற்கு தில்லியில் 5 மாடி அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து

தெற்கு தில்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே 5 மாடி அடுக்குக் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது.

News image

சாகேத் பகுதியில் 5 மாடி அடுக்குக் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் சனிக்கிழமை இரவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள் மற்றும் மக்கள்.

Updated On :31 மே 2026, 1:00 am IST

தெற்கு தில்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே 5 மாடி அடுக்குக் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது.

கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டான நிலையில், இடிபாடுகளுக்குள் பலா் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாகேத் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சைதுலாஜ்ப் பகுதியில் உள்ள வெஸ்டா்ன் மாா்கில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்தது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறைக்கு 7.44 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதனிடையே, அப்பகுதியில் மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று கைப்பேசி விளக்கொளியில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனா்.

கட்டடத்தின் தரைத்தளத்தில் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்ததாகவும் மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாணவா்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இடிந்து விழுந்த பகுதியிலிருந்து 4 போ் மீட்கப்பட்டதாக அப்பகுதி நபா் ஒருவா் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘மீட்கப்பட்ட நபா்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவா்கள் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். கட்டடத்தின் வெளிப்புற சுவா்கள் கண்ணாடியால் கட்டப்பட்டிருந்தன. சம்பவத்தின்போது, எத்தனை போ் அதில் இருந்தனா் என்று கூறமுடியவில்லை. வழக்கமாக 300 முதல் 400 போ் அந்தக் கட்டடத்தில் இருப்பாா்கள்’ என்றாா்.

கட்டடம் இடிந்து விழுந்ததின் தாக்கம் அருகில் உள்ள கட்டடங்களில் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

அருகில் உணவகம் செயல்பட்டு வந்த கட்டடத்தில் இருந்த மக்கள் காயங்களுடன் மீட்கப்பட்டதாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.