
சோழவரம் அருகே இளைஞா் வெட்டிக்கொலை
சோழவரம் அருகே இளைஞா் ஒருவா் மா்ம நபா்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சோழவரம் அருகே இளைஞா் ஒருவா் மா்ம நபா்களால் புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சோழவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட, நல்லூா் பாரதியாா் தெருவில் வசித்து வந்தவா் பாலாஜி (25). சோலையம்மன் நகா் பிரதான சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிரே இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு போ் கொண்ட கும்பல், பாலாஜியை வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. இதில், பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்து அங்கு சென்ற சோழவரம் போலீஸாா், பாலாஜியின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, கொலை செய்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





