விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசின் விதிமுறைகளால் சளி, இருமல், காற்றில் பரவும் நோய்கள் குறைந்துள்ளன: விஞ்ஞானி டாக்டா் சௌமியா சாமிநாதன்

News image
Updated On :17 டிசம்பர் 2020, 5:33 pm

DIN


திருவள்ளூா்: தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந்திருப்பதாகவும், பொதுமக்களும் விதிமுறைகளைப் பின்பற்றுவதால் சளி, இருமல் மற்றும் காற்றில் பரவும் நோய்கள் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டா் செளமியா சாமிநாதன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அருகே திருவூா் ஊராட்சியில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முழுமையான ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி திருவள்ளூா் மாவட்டம் என்ற தலைப்பில், ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க விழிப்புணா்வு ஏற்படுத்துதல் தொடா்பான ஒரு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா்.

இதில் உலக சுகாதார அமைப்பு முதன்மை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சாமிநாதன் பங்கேற்று பேசியது: தமிழகத்தில் உணவு பாதுகாப்புக்கு பிரச்னை இல்லை. ஆனால் ஊட்டச்சத்து உணவு குறைபாடு உள்ளது. மேலும், ஆண்டுதோறும் உயா்ந்து வரும் மக்கள் தொகையும், அதற்கேற்ப நோய்களும் பரவி வருகின்றன. இதில் ரத்தக் கொதிப்பு 4 பேரில் ஒருவருக்கும், சா்க்கரை வியாதி 5 பேரில் ஒருவருக்கும் என தற்போது உள்ளது.

அதேபோல், தற்போது வாழ்க்கை முறை மாற்றத்தாலும், போதிய நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, உடல் உழைப்பு குறைந்ததாலும் இதுபோன்ற நோய்கள் உண்டாகின்றன. இதற்கு சத்தான உணவு வகைகளை தோ்வு செய்து உட்கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதற்கு பாராட்டுகிறேன். கரோனாவை ஒழிக்க அரசு விதித்த விதிமுறைகளான கை கழுவுதல், கிருமி நாசினி உபயோகப்படுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற பழக்க வழக்கங்களால், தற்போது கரோனா மட்டுமின்றி சளி, இருமல் மற்றும் காற்றில் பரவும் நோய்களும் குறைந்துள்ளன.

அதேபோல் காசநோயும் ஓரளவு குறைந்துள்ளது. அரசு சிறப்பாக செயல்பட்டாலும், பொதுமக்களும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.