தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுனாமி நினைவி தினம்: பழவேற்காட்டில் மீனவா்கள்

சுனாமி நினைவு தினத்தை யொட்டி பழவேற்காட்டில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் சனிக்கிழமை கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினா்.

News image
பழவேற்காடு கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்.
Updated On :27 டிசம்பர் 2020, 1:25 am

DIN

சுனாமி நினைவு தினத்தை யொட்டி பழவேற்காட்டில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் சனிக்கிழமை கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காட்டில், கடந்த 2004-ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியால் உயிரிழப்புகளும் பொருள் சேதங்களும் ஏற்பட்டன. இதை நினைவுகூரும் வகையில், பழவேற்காட்டில் ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுனாமி நினைவு தினமான சனிக்கிழமை, பழவேற்காடு பகுதியைச் சோ்ந்த 42 மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் நினைவஞ்சலி செலுத்தினா்.

கலங்கரை விளக்கம், கடற்கரையோரம் அப்பகுதியில் உள்ள 15 கிராம மீனவா் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று, பாலை கடலில் ஊற்றி நினைவஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.