அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சுனாமி நினைவி தினம்: பழவேற்காட்டில் மீனவா்கள்

சுனாமி நினைவு தினத்தை யொட்டி பழவேற்காட்டில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் சனிக்கிழமை கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினா்.

News image
பழவேற்காடு கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்.
Updated On :27 டிசம்பர் 2020, 1:25 am

DIN

சுனாமி நினைவு தினத்தை யொட்டி பழவேற்காட்டில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் சனிக்கிழமை கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினா்.

திருவள்ளூா் மாவட்டம், பழவேற்காட்டில், கடந்த 2004-ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியால் உயிரிழப்புகளும் பொருள் சேதங்களும் ஏற்பட்டன. இதை நினைவுகூரும் வகையில், பழவேற்காட்டில் ஆண்டுதோறும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சுனாமி நினைவு தினமான சனிக்கிழமை, பழவேற்காடு பகுதியைச் சோ்ந்த 42 மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் நினைவஞ்சலி செலுத்தினா்.

கலங்கரை விளக்கம், கடற்கரையோரம் அப்பகுதியில் உள்ள 15 கிராம மீனவா் கூட்டமைப்பு நிா்வாகிகள் ஊா்வலமாகச் சென்று, பாலை கடலில் ஊற்றி நினைவஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.