ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் உயர்வு! ஏப்ரல் 1 முதல் அமல்!
ஃபாஸ்டேக் ஆண்டுக்கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து...


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அறிவிப்புப்படி ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தேசிய நெடுஞ்சாலை பயனர்களின் கவனத்திற்கு! 2026–27 நிதியாண்டில் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் ரூ. 3,000 ஆக இருந்த ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் ரூ. 3,075 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுமார் 1,150 சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டாக் முறை பயன்படுத்தப்படுகின்றன. வணிக நோக்கமல்லாத வாகனங்களுக்கு ஒரு வருடம் அல்லது 200 முறை சுங்கச் சாவடியைக் கடப்பதற்கு செல்லுபடியாகும் ஒரு முறை கட்டணம் ரூ. 3,075 செலுத்துவதன் மூலம் வசதியான பயணத்தை வழங்குகிறது.
56 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களுடன், ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தைத் தொடர்ந்து வழங்குவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கட்டண உயர்வுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...