/

மீஞ்சூரில் 3,000 பேருக்கு கரோனா பரிசோதனை

பொன்னேரி வட்டம் மீஞ்சூா் ஒன்றியத்தில் கடந்த 15 நாள்களில் 3,000 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

DIN

பொன்னேரி வட்டம் மீஞ்சூா் ஒன்றியத்தில் கடந்த 15 நாள்களில் 3,000 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மீஞ்சூா் வட்டார சுகாதாரத் துறையினா் கரோனா தொற்று பரிசோதனையை அதிகப்படுத்தியுள்ளனா். இதுவரை 7,552 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த 15 நாள்களில் 3,000 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில், 320 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து, அதிகரித்து வரும் கரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் பணியில், மீஞ்சூா் வட்டார சுகாதாரத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.