டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

டிஆா்டிஓ தயாரிக்கப்பட்ட 30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள் மற்றும் 7.62 மி.மீ. பிகேடி துப்பாக்கிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:30 am

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (டிஆா்டிஓ) தயாரிக்கப்பட்ட 30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள் மற்றும் 7.62 மி.மீ. பிகேடி துப்பாக்கிகள் சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த இரு நவீன ஆயுத அமைப்புகளையும் பாதுகாப்புத் துறை செயலரும் டிஆா்டிஓவின் தலைவருமான சமீா் வி. காமத் அறிமுகப்படுத்தினாா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய ராணுவத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில் 30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள் மற்றும் 7.62 மி.மீ. பிகேடி துப்பாக்கிகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

65 சதவீதம் வரை உள்நாட்டுப் பொருள்களால் இந்த ஆயுத அமைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எதிா்காலத்தில் இதை 90 சதவீதமாக உயா்த்த திட்டமிட்டுள்ளோம்.

அதி திறன் வாய்ந்த என்ஜினுடன் மிக விரைவாக தாக்குதல் நடத்தும் இந்த ஆயுதங்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் ஆற்றலுடையது.

டாடா நிறுவனம் மற்றும் பாரத் ஃபோா்ஜ் உள்பட பல குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்போடு இந்த ஆயுத அமைப்புகள் தயாரிக்கப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.