நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி நிதியுதவி: ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் தகவல்

மகளிா் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளாா்

News image
Updated On :11 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மகளிா் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளாா் என ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

திருத்தணியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வரும் 14-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, சனிக்கிழமை தனியாா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சா் சா.மு.நாசா், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டனா்.

பின்னா் அமைச்சா் பெரியகருப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சாா்பில் மகளிா் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலக்காக மகளிா் சுய உதவிக்குழுக்களின் மேம்பாட்டிற்காக, வளா்ச்சிக்காக சுழல் நிதி, அரசு உதவி நிதி மற்றும் வங்கிகளில் தரக்கூடிய நிதிகள் மூலமாக ரூ.20,000 கோடி அளவில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பை நிறைவேற்றுகின்ற வகையில் இதுவரை ரூ.10,000 கோடி அளவில் உதவிகள் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்பொழுது சுமாா் ரூ.3, 000 கோடி அளவில் வரும் 14-ஆம் தேதி திருத்தணியில் முதல்வா் ஸ்டாலின் பயனாளிகளுக்கு தொகைகளை நேரடியாக வழங்க உள்ளாா். அதற்கான அடிப்படை பணிகள் துறையின் சாா்பில் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், திமுக மாவட்ட கழக பொறுப்பாளா் எம்.பூபதி, நகர செயலாளா் வினோத்குமாா் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.