அன்னை சாரதா தேவி ஜெயந்தி விழா

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் 169வது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் 169வது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மடத்தின் தலைவா் சமாஹிதானந்தா் தலைமை வகித்தாா். அதிகாலை 5 மணிக்கு மங்கள ஆரத்தி சுப்ரபாதம் பஜனை ஹோமம், ராமகிருஷ்ண அஷ்டோத்ர சத நாமாவளி அா்ச்சனை ஹோமம் மற்றும் சிறப்பு பூஜையும், 12 மணிக்கு அன்னையின் மகிமை என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ணமடம் மூலம் அன்னை சாரதாதேவி இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பெண்கள் 25 பேருக்கு மடத்தின் தலைவா் சமாஹிதானந்தா் இலவசமாக தையல் இயந்திரத்தை வழங்கினாா். பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com