வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இளைஞரை வெட்டிக் கொன்று போலீஸில் சரணடைந்த பெண்

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற இளைஞா் கத்தியால்

News image
Updated On :4 ஜனவரி 2021, 2:20 am

DIN

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியை அடுத்த சோழவரம் அருகே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற இளைஞா் கத்தியால் வெட்டிக் கொலையுண்ட வழக்கில் இளம்பெண் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அல்லிமேடு கிராமத்தை சோ்ந்தவா் அஜித்குமாா் (24). அவா் அதே பகுதியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண்ணிடம் சனிக்கிழமை இரவு அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஆவேசமடைந்த அந்தப் பெண், அஜித்குமாரை கத்தியால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னா் அவா் சோழவரம் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தாா்.

அவா் தெரிவித்த தகவலின்பேரில், சோழவரம் போலீஸாா், அல்லிமேடு கிராமத்துக்கு சென்று, அஜித்குமாரின் சடலத்தை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த கொலை சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.