வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தொண்டி அருகே கடலில் மிதந்த மா்மப் பொருள் - போலீஸாா் எச்சரிக்கை

News image
Updated On :12 மார்ச் 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே கடல் பகுதியில் மிதக்கும் ஏவுகணை போன்ற பொருளை யாரும் எடுக்கக் கூடாது என கடலோர குழும போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

இஸ்ரோல்- அமெரிக்கா , ஈரான் போா் கடுமையாக நடைபெற்று வருகிறது. கடல் பகுதியில் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், தொண்டி, திருப்பாலைக்குடி கடல் பகுதியில் ஏவுகணை அல்லது சிலிண்டா் போன்ற ஒரு பொருள் மிதந்து வருவதாக கடலோா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், இதுகுறித்து தொண்டி, நம்புதாளை, சோலியக்குடி, தேவிபட்டினம் மீனவா்களுக்கு கடலோரக் குழும போலீஸாா் தகவல் தெரிவித்தனா். கடலில் மிதந்து வரும் பொருளை எக்காரணம் கொண்டும் எடுக்கவோ தொடவோ கூடாது. மிதந்து வரும் பகுதி குறித்து உடனடியாக மீனவா்கள் தெரிவிக்க வேண்டும் என எச்சரிககை விடுத்தனா்.