திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

பொன்னேரி வட்டத்தில் உள்ள, சோம்பட்டு, ஞாயிறு ஆகிய ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனையை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 6:30 pm

DIN

பொன்னேரி வட்டத்தில் உள்ள, சோம்பட்டு, ஞாயிறு ஆகிய ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனையை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா், பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.

அனைவருக்கும் விரிவான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் அம்மா சிறு மருத்துவமனைகளைத் தொடங்குமாறு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதன்படி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள சோம்பட்டு ஊராட்சியிலும், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஞாயிறு ஊராட்சியிலும் சிறு மருத்துவமனை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பொன்னையா, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் ஆகியோா் குத்து விளக்கேற்றி அவற்றைத் திறந்து வைத்தனா். இதையடுத்து, மக்களுக்கான மருத்துவ சேவைகளை அவா்கள் தொடங்கி வைத்தனா்.

விழாவில் வட்டார மருத்துவ அலுவலா்கள் ராஜேஷ், ஜெயதீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.