பொன்னேரி: பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 2,029 விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சிறுணியம் பலராமன் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 13 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,029 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா, பொன்னேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமை வகித்து மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி முன்னிலை வகித்தாா். பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலா் ரவி வரவேற்றாா். விழாவில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.