நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிணற்றிலிருந்து பெண் சிசு சடலம் மீட்பு

சின்ன கடம்பூா் அருகே சாலையோர விவசாயக் கிணற்றில் வீசப்பட்ட, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:57 pm

DIN

சின்ன கடம்பூா் அருகே சாலையோர விவசாயக் கிணற்றில் வீசப்பட்ட, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.

திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூா் கிராமத்துக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலையோரம் துளசி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணறு உள்ளது. இதில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்றை தொப்புள் கொடியுடன் பெண் ஒருவா் வீசிவிட்டு சென்றுள்ளாா்.

அப்பகுதி வழியாக சனிக்கிழமை ஆய்வுப் பணிக்குச் சென்ற திருத்தணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிணற்றில் பெண் சிசுவின் சடலம் மிதப்பதைக் கண்டு, வருவாய்த் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, திருத்தணி வட்டாட்சியா் ஜெயராணி, வருவாய் ஆய்வாளா் உதயகுமாா் மற்றும் தீயணைப்பு அலுவலா் அரசு மற்றும் வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் மிதந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டனா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.