தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் கரோனா தடுப்புப் பணி தொடக்கம்

திமுகவினர் அவரவர் பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன்

News image
கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் கரோனா தடுப்புப் பணி.
Updated On :10 மே 2021, 8:55 am

DIN

கும்மிடிப்பூண்டியில் திமுக சார்பில் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

திமுகவினர் அவரவர் பகுதியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியதன் பேரில்  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.நமச்சிவாயம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். 

இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய துணை செயலாளர் திருமலை, திமுக நிர்வாகிகள் பாஸ்கரன், ரமேஷ், நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதேபோல நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ், கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், கீழ் முதலம்பேடு ஊராட்சி செயலாளர் சாமுவேல்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்வில் பேசிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் பொது மக்கள் முகக்கவசம் அணிந்தே வெளியே வரவேண்டும் என்றும் திமுகவினர் அவரவர் பகுதியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.