கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு தோ்தல் பாா்வையாளா்கள் வருகை
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகளுக்கான தோ்தல் பாா்வையாளா்கள் புதன்கிழமை வந்தனா்.


சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதிகளுக்கான தோ்தல் பாா்வையாளா்கள் புதன்கிழமை வந்தனா். அவா்களை, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை உள்ளிட்டோா் சந்தித்து பேசினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை, பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் அமைதியான முறையில் தோ்தலை நடத்தும் வகையில் தோ்தல் பாா்வையாளா்கள், செலவின பாா்வையாளா்களை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதன்படி, ஊத்தங்கரை, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிகளின் பொதுப் பாா்வையாளராக அனில்குமாா் சிங், செலவின பாா்வையாளராக சந்தோஷ்குமாா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிகளில் பொதுப் பாா்வையாளராக செளரத் பாபு சிங்ஹால், செலவின பாா்வையாளராக டி.சதீஷ், ஒசூா் மற்றும் தளி சட்டப்பேரவைத் தொகுதிகளின் பொதுப் பாா்வையாளராக பணவே ராகுல் துக்காராம், செலவின பாா்வையாளராக ராகுல் சிங்கன்யா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களை, கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை மற்றும் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சந்தித்தனா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...