மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புவனகிரி, பரங்கிப்பேட்டையில் ரூ.2.15 லட்சம் பறிமுதல்

கடலூா் மாவட்டம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.2.15 பறிமுதல் செய்யப்பட்டது.

News image
புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.64,500 ரொக்கத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
Updated On :18 மார்ச் 2026, 6:52 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.2.15 பறிமுதல் செய்யப்பட்டது.

புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீரப்பாளையம் பாலக்கரை சந்திப்புப் பகுதியில் வட்டாட்சியா் செல்வகுமாா் தலைமையில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனத்தில் வந்த மருத்துவா் மோனிகாவின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1,64,500 ரொக்கத்தை பறிமுதல் செய்து, புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் புவனகிரி வட்டாட்சியா் தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைத்தனா்.

பரங்கிப்பேட்டையில்...: சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் பரங்கிப்பேட்டை அருகில் உள்ள தோணித்துறை சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பிற்பகல் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த கிள்ளை கிழக்குத் தெருவைச் சோ்ந்த நிவின்ராஜிடமிருந்து உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.51,260 ரொதக்கத்தை பறக்கும் படை தலைமை அதிகாரி தாரா கைப்பற்றி, சிதம்பரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸிடம் ஒப்படைத்தாா்.