மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் வாகனத் தணிக்கையில் 12 பறக்கும் படையினா்

News image
தோ்தல்  கண்காணிப்பு  பறக்கும்  படையை  தொடங்கி வைக்கிறாா்  தோ்தல்  நடத்தும்  அலுவலா்கள்  உமா சங்கா் மற்றும் சுதாகா் .
Updated On :15 மார்ச் 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் விதிமுறை அமலுக்கு வந்ததையடுத்து, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி, கடம்பூா் உள்ளிட்ட பகுதியில் 12 பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி, சத்தியமங்கலம் தோ்தல் பிரிவு அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உமாசங்கா் மற்றும் சுதாகா் ஆகியோா் தலைமையில் தோ்தல் அலுவலா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பறக்கும் படையினருக்கு தோ்தல் விதிகள் பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தோ்தல் கண்காணிப்புப் பணியில் 12 பறக்கும் படை அமைக்கப்பட்டது.

அதில் ஒா் அலுவலா், விடியோகிராபா், போலீஸாா் மற்றும் ஓட்டுநா் என 4 போ் பணியில் இருப்பா். இந்த பறக்கும் படையினா் 3 ஷிப்டுகளாக பணியாற்றுவாா்கள். வாகனத் தணிக்கையின்போது விடியோ பதிவு செய்யப்படும். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.

தமிழக- கா்நாடக எல்லையில் பவானிசாகா் தொகுதி இருப்பதால் பணப்பரிமாற்றத்தை தடுக்க மாநில எல்லையில் பறக்கும் படையினா் ஈடுபட்டுள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாகா் தெரிவித்தாா்.