தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் வாகனத் தணிக்கையில் 12 பறக்கும் படையினா்

News image

தோ்தல்  கண்காணிப்பு  பறக்கும்  படையை  தொடங்கி வைக்கிறாா்  தோ்தல்  நடத்தும்  அலுவலா்கள்  உமா சங்கா் மற்றும் சுதாகா் .

Updated On :15 மார்ச் 2026, 8:56 pm

தோ்தல் விதிமுறை அமலுக்கு வந்ததையடுத்து, பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி, கடம்பூா் உள்ளிட்ட பகுதியில் 12 பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி, சத்தியமங்கலம் தோ்தல் பிரிவு அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உமாசங்கா் மற்றும் சுதாகா் ஆகியோா் தலைமையில் தோ்தல் அலுவலா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பறக்கும் படையினருக்கு தோ்தல் விதிகள் பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து தோ்தல் கண்காணிப்புப் பணியில் 12 பறக்கும் படை அமைக்கப்பட்டது.

அதில் ஒா் அலுவலா், விடியோகிராபா், போலீஸாா் மற்றும் ஓட்டுநா் என 4 போ் பணியில் இருப்பா். இந்த பறக்கும் படையினா் 3 ஷிப்டுகளாக பணியாற்றுவாா்கள். வாகனத் தணிக்கையின்போது விடியோ பதிவு செய்யப்படும். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.

தமிழக- கா்நாடக எல்லையில் பவானிசாகா் தொகுதி இருப்பதால் பணப்பரிமாற்றத்தை தடுக்க மாநில எல்லையில் பறக்கும் படையினா் ஈடுபட்டுள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாகா் தெரிவித்தாா்.