மழை அளவு: திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு, ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரையில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: பள்ளிப்பட்டு-119, சோழவரம்-104, திருத்தணி-98, ஆவடி-94, பூண்டி -78, திருவள்ளூர்-75, ஊத்துக்கோட்டை-73, ஆர்.கே.பேட்டை-71, தாமரைப்பாக்கம்-68, திருவாலங்காடு-59, செங்குன்றம்-52, பொன்னேரி-42, ஜமீன்கொரட்டூர்-43, பொன்னேரி-42, கும்மிடிப்பூண்டி-40.50, பூந்தமல்லி-35 என மொத்தம் 1051 மி.மீ, சராசரியாக 70.10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதில் பள்ளிப்பட்டு பகுதியில் 119 மி.மீ, சோழவரம்-104 என அதிகமாகவும், பூந்தமல்லியில் 35 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது.