ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆற்றில் குதித்ததாகக் கருதப்பட்டதாய், மகள் வீடு திரும்பினா்

பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குதித்ததாகக் கருதப்பட்ட தாய், மகள் வீடு திரும்பினா்.

News image
Updated On :20 நவம்பர் 2021, 6:30 pm

DIN

பெரியபாளையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குதித்ததாகக் கருதப்பட்ட தாய், மகள் வீடு திரும்பினா்.

பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த விஜயகுமாா் மனைவி நிரோஷா (35) . இவருக்கு 2 பெண் குழந்தைகள். இவரது மூத்த பெண் தா்ஷியை, அவரது பாட்டி வீட்டில் உள்ளாா்.

இரண்டாம் குழந்தை வினிதாவுடன் நிரோஷா பூ வியாபாரம் செய்துவருகிறாா்.

இந்த நிலையில், வெங்கல் அருகே அமைந்துள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டு செல்லியம்மன் கோயில் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிரோஷா நிறுத்திவிட்டு, தனது வினிதாவுடன் காணாமல் போனாா். அப்போது, தா்ஷினிக்கு ‘ ஐ மிஸ் யூ’ என கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பியிருந்தாா்.

இதனால் இருவரும் அணைக்கட்டில் குதித்திருக்கலாம் என்ற கோணத்தில் வெங்கல் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயவீர தலைமையில் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், திருமிசையில் உள்ள உறவினா் வீட்டில் இருவரும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் மீட்டனா்.

கடன் தொல்லை காரணமாக, தற்கொலை செய்து கொண்டதாக நம்ப வைத்து விட்டு வந்ததாக நிரோஷா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.