அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது. திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அருகே காரணி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின பெண்ணை காதலித்து கௌதமன் திருமணம் செய்து வாழ்ந்த நிலையில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் பெற்றோர் வீட்டிற்கு வந்த கௌதமை, ஆணவ படுகொலை செய்து தூக்கிட்டுள்ளனர். அதோடு, மனைவிக்கு தெரியாமல் சடலத்தையும் எரித்து தகனம் செய்து அழித்தனர். இது தொடர்பாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையிலும் காவலர்கள் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டியலின பெண்ணை காதலித்து திருமணம் செய்த காரணத்திற்காகவே கெளதமனை ஆணவ படுகொலை செய்துள்ளனர். அதனால் பாதிக்கப்பட்ட அமுலுவுக்கும், குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும்.