எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் பொன்விழா கொண்டாட்டம்
திருவள்ளூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை பொன்விழா கொண்டாடப்பட்டது.
அதிமுக 50-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் வடமதுரை ஊராட்சியில் அரசுப் பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், எல்லாபுரம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ் ஆகியோரின் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகளை வழங்கி பொன்விழா கொண்டாடப்பட்டது.
எல்லாபுரம் ஒன்றிய குழு துணைப் பெருந்தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் மோகன், கிளை செயலாளர்கள் வடமதுரை சீனிவாசன், ராஜீவ் காந்தி, மாவட்ட பிரதிநிதி குருமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் ராம்தாஸ், வடமதுரை ராஜ்மோகன் புஷ்பராஜ், நாகப்பன், ஆகியோர் உள்பட திரளான நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.