சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தண்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

 மேட்டுப்பாளையம் அருகே முசலையன் கண்டிகை கிராமத்தில் உள் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:54 pm

 மேட்டுப்பாளையம் அருகே முசலையன் கண்டிகை கிராமத்தில் உள் ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, வியாழக்கிழமை காலை விமான கோபுரங்கள், ஸ்ரீ தண்டு மாரியம்மன், விநாயகா், முருகா், நவக்கிரக சந்நிதி மேல் உள்ள கோபுரங்களில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை முசலையன் கண்டிகை கிராமத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.