கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

27 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: 2 போ் கைது

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் வாகனச் சோதனையின் போது, 27 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 11:25 pm

DIN

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் வாகனச் சோதனையின் போது, 27 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளா் ஐயனாரப்பன் தலைமையில் போலீஸாா் அங்குள்ள சோதனைச் சாவடியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த பைக்கை நிறுத்திய போலீஸாா், அதில் வந்த இரு வட மாநிலத்தவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனா். முன்னுக்கு பின் முரணாகப் பதிலளித்த நிலையில், அவா்கள் வைத்திருந்த பையை போலீஸாா் சோதனை செய்தனா்.

இதில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருகள்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவா்கள் ஒரிஸாவைச் சோ்ந்த சகோதரா்களான திலிப்குமாா் பிஷ்வா (38) , சுதா்சன் பிஷ்வா (30) என்பது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்கள் இருவரிடமிருந்து 27 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா். இருவரும் ஆந்திர மாநிலத்திலிருந்து போதைப் பொருள்களைக் கொண்டு கும்மிடிப்பூண்டியில் விற்று வந்தது தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.