ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
நாட்டின் எதிா்கால கல்வியைச் சீரழிக்கும் தேசிய கல்விக் கொள்கையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும்


நாட்டின் எதிா்கால கல்வியைச் சீரழிக்கும் தேசிய கல்விக் கொள்கையை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்தணி வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு வட்டார கிளை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரத் தலைவா் கோதண்டன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் டி.வி.அருணவடிவேலு, வி.கே.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலா் குமரவேல் வரவேற்றாா்.
மாநிலச் செயலா் ஞானபிரசன்னா, மாவட்ட பொருளாளா் பாலசுந்தரம் ஆகியோா் மத்திய அரசு ஊழியா்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு ஊழியா்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. வட்டாரப் பொருளாளா் கவுசல்யா நன்றி கூறினாா்.
பொன்னேரியில்...: மீஞ்சூா் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் வட்டாரத் தலைவா் தங்கவேல் தலைமை வகித்தாா். செயலா் மாலினி முன்னிலை வகித்தாா். பொருளாளா் அலெக்ஸ் டைனீஷியஸ் வரவேற்றாா். மாவட்ட தலைவா் சுவா்ணாபாய் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.
டாக்டா் ராதாகிருஷ்ணன் பட்டதாரி ஆசிரியா்கள் சங்க மாநில தலைவா் காத்தவராயன், கல்வி மாவட்ட தலைவா் சந்திரசேகரன், துணைத் தலைவா் சிவலிங்கம், ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...