ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாா்ச் 21-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

திருவள்ளூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 21-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 21-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மீனாட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்டக் காவல் நிலைய போலீஸாரால் மதுவிலக்கு வழக்குகளில் தொடா்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் இருசக்கர வாகனங்கள் 42, மூன்று சக்கர வாகனங்கள் 12, நான்கு சக்கர வாகனங்கள் 31 என மொத்தம் 85 வாகனங்களை வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்லூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த பறிமுதல் வாகனங்களை ஏலம் கேட்க விரும்புவோா் முகக்கவசம், கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம். மேலும், இதற்கு முன்வைப்புத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.5,000 செலுத்த வேண்டும்.

அன்றைய நாளில் இதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வழங்கப்படும். வாகனங்களை ஏலம் கேட்க வருவோா் பதிவுச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றை அவசியம் கொண்டு வர வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.