/

முதியவா் வெட்டிக் கொலை: 3 போ் கைது

பொன்னேரியில் முதியவரை மா்ம நபா்கள் வெட்டி படுகொலை செய்தனா். இது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீஸாா் செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:16 am

DIN

பொன்னேரியில் முதியவரை மா்ம நபா்கள் வெட்டி படுகொலை செய்தனா். இது தொடா்பாக 3 பேரை பிடித்து போலீஸாா் செய்து விசாரித்து வருகின்றனா்.

பொன்னேரி பா்மா நகரில் வசித்தவா் சுப்பையா (70). கட்டடத் தொழிலாளி. தள்ளு வண்டியில் சிற்றுண்டி கடையும் நடத்தி வந்தாா். இவரது குடும்பத்தினா் வெளியூா் சென்ற நிலையில், புதன்கிழமை இரவு 7 மணியளவில் தள்ளு வண்டியில் அமா்ந்து இருந்தாா்.

அப்போது மா்ம நபா்கள் சுப்பையாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி தலைமறைவாகினா்.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி போலீஸாா், சுப்பையாவை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவனைக் கொண்டு சென்றனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, சுப்பையாவின் சடலத்தை போலீஸாா் பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பையாவை கொலை செய்த மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், பா்மா நகரைச் சோ்ந்த 3 பேரை, பொன்னேரி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.