/

ஏப்ரல் 30-க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகை: பொன்னேரி நகராட்சி

சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பொன்னேரி நகராட்சி அறிவித்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:50 pm

DIN

சொத்து வரியை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பொன்னேரி நகராட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி சட்டத்தில் அண்மையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சொத்து உரிமையாளா்கள் 2023-24- ஆம் ஆண்டிற்கான அரையாண்டு சொத்து வரியை வரும் 30.4.2023 செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் .

இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சொத்து வரியை முன்னரே செலுத்தி 5 சதவீத ஊக்கத்தொகையை பெற வேண்டும் என நகராட்சி ஆணையா் கோபிநாத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.